மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் : மீண்டும் நாளை பேச்சுவார்த்தை - சிஐடியூ சவுந்தரராஜன்

சென்னையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மெட்ரோ ரயில் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
x
சென்னையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மெட்ரோ ரயில் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஊழியர்கள் சார்பில் மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், 8 பேரை மெட்ரோ நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் தொடர்ந்து  5 மணி நேரம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில்,  நாளை மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என சிஐடியூ சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்