பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோ விவகாரம் - பார் நாகராஜ் விளக்கம்

பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோ விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பார் நாகராஜ் புகார் அளித்தார்
பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோ விவகாரம் - பார் நாகராஜ் விளக்கம்
x
பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோ விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பார் நாகராஜ் புகார் அளித்தார். கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்த விஜய் என்பவர் அளித்த புகாரை திரும்ப பெறக் கோரி விஜய்யின் மனைவியிடம் பார் நாகராஜ் தொலைப்பேசியில் மிரட்டியதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியனது.  இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பார் நாகராஜ், இந்த ஆடியோவில் இருப்பது தமது குரல் இல்லை என்றார். தம்மை சிக்க வைக்க சதி திட்டம் திட்டப்படுவதாகவும் பார் நாகராஜ் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்