குடியுரிமை விவகாரம் - விண்ணப்பத்தை பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மூன்று மாத கைக்குழந்தையாக சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்தவருக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று மாத கைக்குழந்தையாக சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்தவருக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கபூரில் பிறந்த பிலிப் மேமன் கோஷி என்பவர் கடந்த 1986ம் ஆண்டு மூன்று மாத கைக் குழந்தையாக இருந்த போது இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்த இவருக்கு, இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அவரது தந்தை அரசுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு, குடியுரிமை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
Next Story