உள்ளாட்சி தேர்தலை தாமதம் இன்றி நடத்திட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை கால தாமதம் இன்றி நடத்திட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை தாமதம் இன்றி நடத்திட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
* உள்ளாட்சி தேர்தலை கால தாமதம் இன்றி நடத்திட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

* உள்ளாட்சி தேர்தல் நடத்த, தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில், மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

* இது உள்ளாட்சி ஜனநாயகத்தை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யும் சட்டவிரோத செயல் எனவும் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சியை அதிமுக அரசும் தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் உடனடியாக கைவிட வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.  

* மக்களின் குறைகள் தீர்க்கும் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க தேவையான உள்ளாட்சி தேர்தலை காலதாமதம் இன்றி நடத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்