வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் பணியிடை நீக்கம்

மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் ஆவணங்களை எடுப்பதற்காக சென்ற புகாரின் பேரில், கலால் வரித்துறை வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் பணியிடை நீக்கம்
x
மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் ஆவணங்களை எடுப்பதற்காக சென்ற புகாரின் பேரில், கலால் வரித்துறை வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் சம்பூர்ணத்துடன் சென்ற அந்தத்துறையின் ஆவணப்பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டல அதிகாரிகளான ராஜ பிரகாஷ், சூரிய பிரகாஷ்  ஆகிய மூன்று பேரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் நான்கு பேரும் அனுமதி இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குச் சென்றது தொடர்பாக, மதுரை மேற்கு தொகுதி உதவி தேர்தல் அலுவலர் குருசந்திரனிடம் விளக்கம் கேட்டு,  மாவட்ட தேர்தல் அலுவலர் நடராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்