ஏராளமான மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் - காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு

திருவாரூர் நீடாமங்கலத்தில் காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏராளமான மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் - காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு
x
திருவாரூர் நீடாமங்கலத்தில் காவல் ஆய்வாளர் முனிசேகர் என்பவர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் போக்குவரத்து சீர் செய்வது, மணல் கொள்ளையை தடுப்பது,என சிறப்பாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடியில் பெண்களுக்கு சரியாக பாதுகாப்பு வழங்காததாக கூறி இடமாற்றம் செய்வதற்கான பட்டியலில் அவர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து முனிசேகரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்