இரை தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொல்லும் நபர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் மயில்கள் உள்ளன.
இரை தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொல்லும் நபர்கள்
x
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி,  தாரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் மயில்கள் உள்ளன. தாரமங்கலம் அருகே சோரகை மலையில் மர்ம நபர்கள் மயில் வேட்டையாடுவது  தொடர்ந்து நடக்கிறது. இங்கு வறட்சி நிலவுவதால் குடிநீர், இரை தேடி கிராமப் பகுதிக்குள் வரும் மயில்களின் கூட்டத்தை சிலர், உணவில் விஷம் வைத்து கொன்று வேட்டையாடி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே மர்ம நபர்களை பிடிக்க வனத்துறையினரும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்