திருப்போரூர் : 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து சையத் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
திருப்போரூர் : 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி
x
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து சையத் என்ற இளைஞர் உயிரிழந்தார். தனியார் கல்லூரியில் பொறியியல் 4ஆம் ஆண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த சையத், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். தனது அறையை தானியங்கி பூட்டு மூலம் பூட்டிக் கொண்டு வெளியே வந்த போது, சாவியை உள்ளே வைத்து விட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து,  மொட்டை மாடியில் இருந்து கயிற்றின் மூலம் பால்கனி வழியே இறங்கி, அறைக்குள் சென்று சாவியை எடுக்க முடிவு செய்த சையத், மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கயிறு அறுந்ததில்,14வது மாடியிலிருந்து கீழே விழுந்த அவர் தலை சிதறி உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்