சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா...சேஷ வாகனத்தில் அம்மன் வீதியுலா

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை தேரோட்ட திருவிழாவையொட்டி தினந்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
x
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை தேரோட்ட திருவிழாவையொட்டி தினந்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் நிகழ்ச்சியில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த அம்மனை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

ராமநவமியை முன்னிட்டு பழனியில் உள்ள பஞ்சமுக ராமஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி நடத்தப்பட்ட தீபாராதனையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதேபோல், இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story

மேலும் செய்திகள்