திருவாரூர் அருகே கோவிலை பூட்ட முயன்றதால் சாலை மறியல்...

திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலய திருவிழா கடந்த 7ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது
திருவாரூர் அருகே கோவிலை பூட்ட முயன்றதால் சாலை மறியல்...
x
திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலய திருவிழா கடந்த 7ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுவாமி ஊர்வலம் வருவது தொடர்பாக இரு தரப்பினரிடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் கோவிலை திறப்பதற்கும், அபிஷேகம் செய்வதற்கும் இரு தரப்பினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு 144 தடை உத்தரவை திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் பிறப்பித்தார். இதை கண்டித்து வண்டாம்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த நன்னிலம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இரண்டு மணி நேரமாக நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்