2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை வீராணம் ஏரி எட்டியுள்ளது.
2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி
x
சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், வீராணம் ஏரி முழு கொள்ளளவான 47.5 அடியை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முழுக் கொள்ளளவை வீராணம் ஏரி எட்டிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரிக்கு தற்போது இரண்டாயிரத்து 111 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏரியில் இருந்து வி.என்.எஸ் வாய்க்கால் வழியாக ஆயிரத்து 296 கனஅடியும், சென்னை குடிநீருக்காக 59 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்