வீரமணிக்கு கருப்பு கொடி காட்டிய இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கைது

கரூரில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீரமணிக்கு கருப்பு கொடி காட்டிய இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கைது
x
கரூரில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற  இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சியில் இருந்து கரூர் வழியாக கோபிசெட்டிபாளையத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வீரமணி சென்றார்.  கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் அவருக்கு திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு திடீரென வந்த இந்து முன்னணி நகர செயலாளர் சரவணன் பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டு கருப்புக் கொடி காட்ட முயன்றனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்