தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகளை அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து

கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
x
மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தை தொடர்ந்து தமிழகத்தில் கோயில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசாணை வெளியிட்ட தமிழக அரசு, ஜனவரி 31ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்யுமாறு  உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்தும், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் கடை உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில் கடைகளை அகற்றுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்