மூக்கையா தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க பேனர் : பேனரை கிழித்து எறிந்த அ.ம.மு.கவினர் சாலை மறியல்

உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் நினைவிடம் முன், வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை அ.ம.மு.கவினர் கிழித்து எறிந்ததோடு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் நினைவிடம் முன், வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை அ.ம.மு.கவினர் கிழித்து எறிந்ததோடு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தை விதிமீறி பேனர் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், இது தொடர்பாக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றம்சாட்டினர். தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுவதாக அ.ம.மு.க நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். இந்த நிகழ்வால், உசிலம்பட்டி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்