திருச்சி : குவாரி நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே கல்குவாரியில் மூழ்கி, தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
திருச்சி : குவாரி நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு
x
திருச்சி மாவட்டம் துவாக்குடி அடுத்த வாழவந்தான் கோட்டை பர்மா காலனியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன், தனது மகன் கார்த்திக், மகள்கள் பிந்தியா, கங்கனா ஆகியோருடன் கல்குவாரி பகுதிக்கு சென்றுள்ளார். இதில், மகன் கார்த்திக் 300 அடி ஆழ குவாரி குட்டைக்குள் விழுந்துள்ளான். மகனை காப்பாற்ற தந்தை கணேசனும் உள்ளே குதித்துள்ளார். நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வரவில்லை. இதுகுறித்து மேலே நின்ற சிறுமிகள் அளித்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து தேடிய தீயணைப்பு படையினர், இரவானதால் நேற்று முன்தினம் திரும்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று 2வது நாளாக உடலை தேடிய நிலையில், தந்தை கணேசனின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. சிறுவன் கார்த்திக்கின் உடல் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்