அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை மோடி அழித்துவிடுவார் - திருமாவளவன்

அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை மோடி அழித்துவிடுவார்
x
பிரதமர் மோடியின் நோக்கமே, அம்பேத்கர் எழுதிய சட்டம் நாட்டை ஆளக்கூடாது என்பதுதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அவர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் தீவிரப் பிரசாரத்தின் போது இவ்வாறு கூறினார். மதசார்பற்ற கூட்டணி வெற்றிபெற பானை சின்னத்தில் வாக்களித்து தம்மை வெற்றிபெறச் செய்ய வலியுறுத்திய திருமாவளவன், மதவாத பாஜக, அதிமுக அமைத்திருப்பது வியாபார கூட்டணி என்றார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை அழிப்பதுதான், என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார். தலித் மக்களின் வாக்குகளை சிதறடித்து, எளிதில் வெற்றிபெறுவோம் என எதிர்க்கட்சிகள் கூறுவதாக அவர் வேதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்