திமுகவினர் எங்கள் பகுதியில் வாக்கு கேட்க வேண்டாம் - திமுக வேட்பாளருடனான வாக்குவாதத்தால் பரபரப்பு

நெல்லை திமுக வேட்பாளர் ஞான திரவியம் மானூர் பகுதி கிராமங்களில் பிரசாரம் செய்தார்
திமுகவினர் எங்கள் பகுதியில் வாக்கு கேட்க வேண்டாம் - திமுக வேட்பாளருடனான வாக்குவாதத்தால் பரபரப்பு
x
நெல்லை திமுக வேட்பாளர் ஞான திரவியம் மானூர் பகுதி கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது, அப்பகுதியின் ஒரு தரப்பு மக்கள் தி.க தலைவர் பேசிய சம்பவத்தை கண்டித்து திமுக தலைவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும், இந்து மக்களை அவமதிப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வேட்பாளர் அங்கிருந்து வேகமாக வெளியேற்றப்பட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனால் கிராமத்தினர் போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

Next Story

மேலும் செய்திகள்