அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் விதி மீறல்? விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு- உயர்நீதிமன்றம்

அதிமுக மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் விதி மீறல்? விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு- உயர்நீதிமன்றம்
x
தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்த அதிமுக மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.தேனியை சேர்ந்த அமாவாசை என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணை தள்ளிவைக்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்