பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த இளைஞர் : இளைஞரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பெண்ணிடம் இருந்து, தங்கச்சங்கிலியை பறித்த இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த இளைஞர் : இளைஞரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்
x
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பெண்ணிடம் இருந்து, தங்கச்சங்கிலியை பறித்த இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர். வசுமதி என்ற அந்தப்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள், கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது, வசுமதி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் இளைஞர்களை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால், இருவரில் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பியுள்ளான். மற்றொருவன் தப்ப முயலும் போது, மக்கள் அவனை பிடித்து கட்டி வைத்து அடித்ததுடன், போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து பலவகை நம்பர் பிளேட்டுடன் கூடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவனை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்