ஈரோடு : மனைவி மர்ம மரணம் - தலைமறைவான கணவர்
ஈரோட்டில் மனைவி மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில் தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு முனிசிபல் காலனி தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கும் இவரது மனைவி மேகலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக புகாரின் பேரில் காவல் நிலையத்தில் சமரசம் செய்யப்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மேகலா பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு சங்கர் தகவல் தந்துள்ளார். மேகலாவின் உடலில் காயங்கள் இருந்த்தால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், தமது மகள் சாவில் மர்மம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து தலைமறைவான ஆடிட்டர் சங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story