ரஃபேல் பேர ஊழல் தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது

தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்து என். ராம் பாராட்டு
x
எதிர்ப்புகளை தாண்டி ரபேல் பேர ஊழல் தொடர்பான புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது.எஸ்.விஜயன் எழுதிய இந்த புத்தகத்தை மூத்த பத்திரிகையாளர் .இந்து என் ராம் வெளியிட வங்கி சம்மேளன தலைவர் கிருஷ்ணன் பெற்றுகொண்டார்.முன்னதாக இப்புத்தகத்தின் பிரதிகளை பதிப்பகத்திலிருந்து தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.பின்னர் அவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவுப்படி திரும்ப ஒப்படைக்கப்பட்டது.இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு இந்து என் ராம் பாராட்டு தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்