"கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

மழைநீரை வீணடிக்காமல் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
திருவாரூர் மாவட்டம் வாழவாய்க்கால் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து மரியாதை செய்தனர். பின்னர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், டெல்டா விவசாயிகளின் நலனுக்காக எத்தனை கோடி செலவானாலும் முதல் கட்டமாக கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். 

பழிவாங்கும் நோக்கத்தோடு தி.மு.க.வினர் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, அவர்கள் செய்த குற்றங்கள் அனைத்துக்கும் தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்