"சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை" - உச்சநீதிமன்றம்

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
x
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கை விசாரித்த, கீழ் நீதிமன்றம், கடந்த 2004ஆம் ஆண்டு  ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 10 ஆண்டு சிறையை ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ராஜகோபாலின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம், ஜூலை 7ஆம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என கெடு விதித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்