ஆயிரம் ரூபாய்க்காக நடந்த கொலை...

ஈரோடு மாவட்டம் நம்பியூர் புதுசூரிபாளையத்தில் கிருபாகரன் என்பவரை அவரின் அண்ணன் முறை உறவினர் அம்மாசை என்பவர் ஆயிரம் ரூபாய்க்காக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
ஈரோடு மாவட்டம் நம்பியூர் புதுசூரிபாளையத்தில் கிருபாகரன் என்பவரை அவரின் அண்ணன் முறை உறவினர் அம்மாசை என்பவர் ஆயிரம் ரூபாய்க்காக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய இருவருக்கும், ஆயிரம் ரூபாய் கொடுக்கல் வாக்கல் தகராறு ஏற்பட்டுள்ளது.  அவர்களை சமாதானம் செய்து வீட்டுக்கு  அனுப்பிய நிலையில், ஆத்திரமடைந்த அம்மாசை நள்ளிரவில் கிருபாகரன் வீட்டுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், வீட்டில் பதுங்கியிருந்த அம்மாசையை கைது செய்து விசாரணை 

Next Story

மேலும் செய்திகள்