விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு...

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
நெமிலி பகுதியில் உள்ள மளிகை கடை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, அவரது வீட்டு கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கியுள்ளார். கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்து அவரது இரண்டு மகன்களும் உள்ளே இறங்கினர். பாதுகாப்பாற்ற முறையில் தொட்டிக்குள் இறங்கிய அவர்கள், விஷவாயு தாக்கியதில் உள்ளேயே மயங்கினர். அவர்களை காப்பாற்றுவதற்காக வடமாநில இளைஞர் சுரதாபாய், லட்சுமிகாந்தன், பரமசிவம் ஆகியோர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால், விஷ வாயு தாக்கியதில் 6 பேரும் உள்ளேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சார் ஆட்சியர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்