விவசாய நிலங்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் : விவசாயிகள் வேதனை

காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விவசாய நிலங்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் : விவசாயிகள் வேதனை
x
கொடைக்கானல் கீழ்மலை கிராமப்பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டு பயிர்களை அழித்து வருகிறது. மேலும் சாலைகளில் நள்ளிரவில் உலா வரும் யானைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.யானைகள் தொடர்ந்து விவசாயப் பயிர்களை அழித்தும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வருவதால் விவசாயிகள் மிகுந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.எனவே, யானைகளை விரட்ட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்