மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
x
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நெடுநல்வாடை படத்தின் விழாவில் பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது, குற்றவாளிகளை தோலுரிப்பதற்கு பதிலாக அவர்கள் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்க வேண்டும் என்று வைரமுத்து கூறினார். ஆண், பெண் குழந்தைகளின் வளர்ப்பில் புதிய மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்றும் வைரமுத்து அறிவுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்