சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார்...

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
x
சுல்தான்பேட்டையில் வசித்து வந்த அவருக்கு வயது 64. வழக்கம் போல், காலையில் எழுந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறிது நேரத்திலேயே கனகராஜ் உயிர் பிரிந்தது. கிட்டத்தட்ட 35 ஆண்டு காலம் அதிமுகவில் இருந்த அவர், இருமுறை சுல்தான்பேட்டை ஒன்றிய துணைத் தலைவராகவும், ஒருமுறை மாவட்ட குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மறைந்த எம்.எல்.ஏ கனகராஜின் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் மறைவை தொடர்ந்து, சட்டப்பேரவையில் காலி இடங்கள் 22 ஆக அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்