காவல் ஆய்வாளர் இறுதி ஊர்வலம் - பொதுமக்கள், வியாபாரிகள் கண்ணீர் அஞ்சலி

நெல்லையில் காவல் ஆய்வாளர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்
காவல் ஆய்வாளர் இறுதி ஊர்வலம் - பொதுமக்கள், வியாபாரிகள் கண்ணீர் அஞ்சலி
x
பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் ராமையா.பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்த இவர், கடந்த 9ஆம் தேதி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ராமையா,சென்னையில் உயிரிழந்தார்.இதையடுத்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய போது உதவி என வரும் மக்களை அரவணைத்து, அவர்களுக்கான நடவடிக்கைகளை துரிதமாக செய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்