முகிலன் வழக்கு - சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி தொடர்ந்த ஆள்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
முகிலன் வழக்கு - சிபிசிஐடி அறிக்கை தாக்கல்
x
சமூக செயற்பாட்டாளர் முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி ஹென்றி திபேன் தொடர்ந்த ஆள்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது சிபிசிஐடி தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.அதில் 17 தனிப்படையினர் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டது.அப்போது, முகிலனின் மூன்று செல்போன் சிக்னல்கள் மூலம் அவர் சென்ற இடங்களை விசாரிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள்,ஏப்ரல் 8ம் தேதி அடுத்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என  சிபிசிஐடிக்கு உத்தரவிட்டனர்

Next Story

மேலும் செய்திகள்