திருப்பூர் சாலை தடுப்பில் கார் மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு

திருப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் சாலை தடுப்பில் கார் மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு
x
திருப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ஈரோட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் காரில் திரும்பியுள்ளனர். திருப்பூர் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த மாணவர் பிருத்திவிராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்றொரு மாணவர் கிருஷ்ணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் சந்தோஷ்குமார் என்ற மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்