கிராமம் அருகே உலவும் புலி : ஆதிவாசி மக்கள் அச்சம்...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்கள் அருகே புலி உலவுவதால மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கிராமம் அருகே உலவும் புலி : ஆதிவாசி மக்கள் அச்சம்...
x
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்கள் அருகே புலி உலவுவதால மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வன பகுதிகளுக்குள் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அரக்கோடு, கொக்கோடு ஆகிய ஆதிவாசி கிராம பகுதிகளுக்கு வருகின்றன. அங்குள்ள குளங்களில் புலிகள் தண்ணீர் குடிப்பதுடன் அங்கேயே படுத்து ஓய்வும் எடுக்கின்றன. இதனால், அச்சமடைந்துள்ள கிராம மக்கள்,   இந்த புலியை வன பகுதிகளுக்குள் கொண்டு விட கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்