மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரி ரயில் மறியல் போராட்டம்

ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் : 172 பேர் மீது வழக்குப் பதிவு
மதுரை விமான நிலையத்திற்கு  முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரி ரயில் மறியல் போராட்டம்
x
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக  அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியின்  மாநில தலைவர் கதிரவன்,மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட பலரை  காவல்துறையினர் கைது செய்தனர், இந்நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 172 பேர் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்