பத்ம விருதுகள் : குடியரசு தலைவர் கவுரவிப்பு
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கண்கவர் விழாவில், தமிழக சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, பத்மஸ்ரீ விருது பெற்றார்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கண்கவர் விழாவில், தமிழக சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, பத்மஸ்ரீ விருது பெற்றார்.
அவருக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,, இந்த விருதை வழங்கி, கவுரவித்தார்.
நர்த்தகி நட்ராஜூக்கு பத்மஸ்ரீ விருது
நாட்டிய கலைஞர் நர்த்தகி நட்ராஜூக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி, கவுரவித்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, பத்மபூஷண் விருது வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த டாக்டர்கள் ராமசாமி- வெங்கடசாமி உள்பட 56 பேருக்கு, பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர்கலந்து கொண்டனர்.
Next Story