ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புது வாயில் பகுதியில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ரூ.10 லட்சம்  மதிப்பிலான குட்கா பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புது வாயில் பகுதியில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான  தடை செய்யப்பட்ட குட்கா  பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கவரப்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநர் ஆதிகேசவனை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்