கூலி உயர்வு கோரி வேலை நிறுத்தம்

பேண்டேஜ் துணி உற்பத்தி பாதிப்பு
கூலி உயர்வு கோரி வேலை நிறுத்தம்
x
கூலி உயர்வும், பண்டிகை கால விடுப்புக்கு ஊதியமும் வழங்கக் கோரி, ராஜபாளையம் பகுதியில் விசைத்தறி ஊழியர்கள் 8 ஆயிரம் பேர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். மருத்துவத்துக்கு பயன்படும் கட்டுத்துணி தயாரிப்பு ஆலைகள் இயங்கி வரும் சத்திரப்பட்டியில் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டிருந்தன.நாடு முழுவதும் தேவையான 80% பேண்டேஜ் துணி உற்பத்தி இந்த பகுதியில் நடைபெறும் நிலையில், தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பிரச்சினைக்கு சுமுக தீர்வு எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்