"ஜாமீனில் எடுக்க வரும் உறவினர்களை போலீஸ் மிரட்டுகிறது" - நிர்மலா தேவி வழக்கறிஞர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரத்தில் கடந்த 11 மாதங்களாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உள்ளது.
x
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரத்தில் கடந்த 11 மாதங்களாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை  ஜாமீன் வழங்கி உள்ளது. இந்நிலையில், தொலைபேசி வழியாக நமது நிருபருக்கு பேட்டி அளித்த நிர்மலா தேவி வழக்கறிஞர் பசுபதி பாண்டியன்,  ஜாமின் எடுக்க வரும் உறவினர்களை போலீசாரும் சிபிசிஐடியினரும் மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்.  பாதுகாப்பு கொடுப்பதாக கூறியதை அடுத்து சில உறவினர்கள் ஜாமீனில் எடுப்பதற்கு வர சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறிய அவர், நிர்மலா தேவியை சிறையில் இருந்து வியாழக்கிழமையன்று ஜாமீனில் அழைத்து வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்