விருந்தில் கறி இல்லை என்ற தகராறில் கொலை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த சாணம் பட்டியைச் சேர்ந்த பிரபு, தனது தாய் மாமா வீட்டு திருமண நிகழ்சியில் கலந்து கொண்டுள்ளார்.
x
மதுரை மாவட்டம்  வாடிப்பட்டியை அடுத்த சாணம் பட்டியைச் சேர்ந்த பிரபு, தனது தாய் மாமா  வீட்டு திருமண நிகழ்சியில் கலந்து கொண்டுள்ளார் . விருந்தில்  தனக்கு கறி பரிமாறப்படவில்லை என்று கோபித்து கொண்டு புறப்பட்ட  பிரபு , தனது நண்பர்களுடன்  பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மாமா கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபுவை வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். கத்தி குத்தினால் படுகாயம் அடைந்த பிரபு, சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவ மனையில் உயிரிழந்தார் தப்பியோடிய கார்த்திக்கை வாடிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்