புதுச்சேரி : சட்டக்கல்லூரி மாணவர்கள் - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு
புதுச்சேரி அருகே நிர்ணயப்பட்டு கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி நடந்த கோவில் திருவிழாவில் சட்டக்கல்லூரி மாணவர் ராகுல் நந்தன் குழுவினர் நடத்திய கலை நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டது.
புதுச்சேரி அருகே நிர்ணயப்பட்டு கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி நடந்த கோவில் திருவிழாவில் சட்டக்கல்லூரி மாணவர் ராகுல் நந்தன் குழுவினர் நடத்திய கலை நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டது. இதில் சிலர் ராகுல் நந்தன் மற்றும் குழுவினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாததை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டசபையை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story