வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் சாமி ஏரி - குட்டிகளுடன் ஆனந்த குளியல் போடும் யானைகள்

ஒசூர் அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலுக்கு இதமாக காட்டு யானைகள்,அங்குள்ள சாமி ஏரியில், காட்டு யானைகள் ஆனந்த குளியல் போடுகின்றன
வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் சாமி ஏரி - குட்டிகளுடன் ஆனந்த குளியல் போடும் யானைகள்
x
ஓசூரில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, யானைகள் , காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.ஓசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் உள்ள சாமி ஏரி தான் அவைகளின் தண்ணீர் தாகத்தை தீர்த்து வருகிறது.காலை, மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும் இங்கு வன விலங்குகளை காண முடிகிறது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், யானைகள் உற்சாக குளியல் போடுவதை பார்த்து ரசித்தபடி செல்கின்றனர்

Next Story

மேலும் செய்திகள்