கார் மோதி கர்ப்பிணி, மாணவன் பலி

ஓமலூர் அருகே கார் மோதி கர்ப்பிணி பெண் மற்றும் மாணவன் உயிரிழந்ததைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கார் மோதி கர்ப்பிணி, மாணவன் பலி
x
பெரியசோரகை பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் தாறுமாறாக சென்ற கார் மோதியதில், கர்ப்பிணி பெண் மணிமேகலை, மாணவன் கமல்ராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தவர் மீதும், அந்த காரில் வந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். விபத்துகளை தடுக்க பெரியசோரகை பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர். இதனிடையே விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநர், அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்