முகிலன் பற்றிய பதிவுக்கு "சமாதி" என பதிவிட்ட ஆய்வாளர் - விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி முடிவு

வெல்பேர் கட்சியின் செலயலார் முஹம்மது கவுஸ் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
முகிலன் பற்றிய பதிவுக்கு சமாதி என பதிவிட்ட ஆய்வாளர் - விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி முடிவு
x
வெல்பேர் கட்சியின் செலயலார் முஹம்மது கவுஸ் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் சமூக வலைதளத்தில் முகிலன் எங்கே என்று முஹம்மது கவுஸ் வெளியிட்ட பதிவுக்கு காவல் ஆய்வாளர் நாகராஜன் நாரயணன் "சமாதி" என கமெண்ட் செய்துள்ளார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி அலுவககத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா மாநில செயலாளர் முகமது கவுஸ் புகார் அளித்துள்ளார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி, போலீசார் காவல் ஆய்வாளர் நாகராஜனை வரும் திங்கட்கிழமை சென்னையில் சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்