குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் விண்ணப்பம் - தனியார் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

கோவையில் எல்.கே.ஜி சேர்க்கைக்கு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் விண்ணப்பங்கள் என அறிவித்த தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
x
கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அப்போது குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டுமே விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பள்ளி நிர்வாகம் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதாகவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என தெரிவித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்