கருப்புக்கொடி போராட்டம் : வைகோ உள்பட 403 பேர் மீது வழக்குப்பதிவு

கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட 403 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருப்புக்கொடி போராட்டம் : வைகோ உள்பட 403 பேர் மீது வழக்குப்பதிவு
x
கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட 403 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் மதிமுகவினர் நேற்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைகோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாஜக தொண்டர் ஒருவர் கூட்டத்தில் புகுந்து கோஷமிட்டதால், அவரை ஓடஓட விரட்டி மதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது. இதனிடையே,  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட 403 பேர் மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்