இலங்கை சிறையில் உள்ள 46 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

இலங்கைச்சிறையில் உள்ள 46 மீனவர்களையும், 26 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள 46 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
x
இலங்கைச்சிறையில் உள்ள 46 மீனவர்களையும், 26 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 9 ஆம் தேதி, மீன் பிடித்து கொண்டிருந்த 7 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக ராமநாதபுரம்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 46 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்