காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை சம்பளமாக பெற்ற 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை நான்கு வாரங்களில் திருப்பி செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்,
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை சம்பளமாக பெற்ற 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை நான்கு வாரங்களில் திருப்பி செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், வேல்துரை.அரசு ஒப்பந்த தாரராக இருந்து கொண்டே  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அவர் வெற்றி செல்லாது எனவும் அறிவிக்க கோரி, அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட  மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடியானதை தொடர்ந்து, மனோஜ் பாண்டியனின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேல்துரையின் வெற்றி  செல்லாது என தீர்ப்பளித்தது. இதையடுத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ஐந்து ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக வேல்துரை பெற்ற  21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் சம்பளம் மற்றும்  201 நாள் சட்டமன்றம் சென்றதற்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதித்தும் சட்டமன்ற செயலாளர் உத்தரவிட்டார்.இதை, வேல்துரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி பார்த்திபன் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,அரசு ஊழியரையும், மக்கள் சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வையும் ஒரே மாதிரியாக கருத முடியாது என கூறினார். மேலும்,
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, வேல்துரை வெற்றி பெற்றதே செல்லாது என நிரூபிக்கப்பட்டு விட்டதால், வேல்துரை  தானாக முன்வந்து சம்பளத்தை திரும்பி அளித்திருக்க வேண்டும் எனவும் 4  வாரத்தில் 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்

Next Story

மேலும் செய்திகள்