விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக புகார்

தஞ்சையில், விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக புகார்
x
தஞ்சையில், விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில், விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை -திருச்சி சாலை குருவாடிப்பட்டி பகுதியில் ஏராளமான நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் 3 சிறுவர்களை அழைத்துச் சென்ற காவல்துறையினர், கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருட்டு வழக்கில் உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் குற்றத்தை தங்களை ஒத்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாகவும் கோட்டாட்சியர் அலுவலத்தில் அவர்கள் புகார் அளித்தனர். போலீஸ் அழைத்து சென்று மாயமான விஜயகாந்த் என்பவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் மனுவில் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே காயம் அடைந்த இரு சிறுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்