வறட்சியால் காய்ந்த நெற்பயிர்கள் : வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்

திருவள்ளூர் அருகே வறட்சியால் நெற்பயிர்கள், சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
x
திருவள்ளூர் மாவட்டம் ஒதப்பை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு மாவட்ட முழுவதும் கடும் வறட்சி காரணமாக பயிர்கள் கருகின. இதனால், அப்பகுதி விவசாயிகள், கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலில் உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்