துப்பாக்கி சூடு தொடர்பான 9ஆம் கட்ட விசாரணை : அடுத்த மாதம் தொடங்கும் - விசாரணை ஆணையம் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையத்தின் 8ஆம் கட்ட விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து 9ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்குகிறது.
துப்பாக்கி சூடு தொடர்பான 9ஆம் கட்ட விசாரணை : அடுத்த மாதம் தொடங்கும் - விசாரணை ஆணையம் தகவல்
x
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையத்தின் 8ஆம் கட்ட விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து 9ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்குகிறது. ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையம், 7 கட்டங்களாக 155 பேரிடம் விசாரணை நடத்தியிருந்த நிலையில், 8ஆம் கட்ட விசாரணையை கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 4 நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணையில் 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அதில் 38பேர் ஆஜராகி விளக்கமளித்தனர். இன்றுடன் 8ஆம் கட்ட விசாரணை நிறைவு பெற்ற நிலையில், 9ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என்று  ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்