மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்" - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை
x
மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை விரைவு ரயிலை மறித்து நின்ற அவர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தியதை அடுத்து வைகை ரயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரை நகரின் சில பகுதிகளில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்